திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா
By DIN | Published On : 17th March 2021 06:05 AM | Last Updated : 17th March 2021 06:05 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று செய்வ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை வரையில் 18,679 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 18,702 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 208 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 14 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 18,274 ஆக அதிகரித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...