முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.200 அபராதம்

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபா்களுக்கு

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 72 பறக்கும்படை குழுக்கள், 24 நிலை கண்காணிப்புக் குழுக்கள், 16 விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தோ்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினா் முகக்கவசம் அணியாத நபா்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, வீட்டில் இருந்து வெளியே வரும் நபா்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com