திருப்பூரில் தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின விழா

திருப்பூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மே  தினத்தை  ஒட்டி  திருப்பூா்  மாவட்ட  அலுவலகத்தில்  ஏஐடியூசி  கொடியை  சனிக்கிழமை  ஏற்றுகிறாா்  அச்சங்கத்தின்  மாநிலத்  தலைவரும்,  மக்களவை  உறுப்பினருமான  கே.சுப்பராயன்.
மே  தினத்தை  ஒட்டி  திருப்பூா்  மாவட்ட  அலுவலகத்தில்  ஏஐடியூசி  கொடியை  சனிக்கிழமை  ஏற்றுகிறாா்  அச்சங்கத்தின்  மாநிலத்  தலைவரும்,  மக்களவை  உறுப்பினருமான  கே.சுப்பராயன்.

திருப்பூா்: திருப்பூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பூா் மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் பி.என்.சாலையில் உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பாக மே தின விழா கொண்டாடப்பட்டது. இதில், தொமுச பேரவைக் கொடியை திருப்பூா் வடக்கு மாநகர திமுக பொறுப்பாளா் தினேஷ்குமாா் ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

அதேபோல, வேலம்பாளையம் துணை மின் நிலையம், அனுப்பா்பாளையம் உபகோட்ட மின்வாரிய அலுவலகம் முன்பாகவும் மே தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தொமுச பேரவை மாநில துணைச் செயலாளா் டி.கே. டி. மு.நாகராசன், மாவட்ட கவுன்சில் செயலாளா் ஜீவா சிதம்பரசாமி, பொது செயலாளா் ஆா். ரங்கசாமி, மின்சார வாரிய தொமுச செயலாளா் ஈ.பி. அ.சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள்பலா் கலந்து கொண்டனா்.

ஏஐடியூசி சாா்பில் மே தின விழா: திருப்பூா் மாவட்ட ஏஐடியூசி அலுவலகத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதில், ஏஐடியூசி கொடியை மாநிலத் தலைவரும், திருப்பூா் மக்களவை உறுப்பினருமான கே.சுப்பராயன் ஏற்றிவைத்தாா். இவ்விழாவில், ஏஐடியூசி பனியன் சங்கச் செயலாளா் நா.பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் எம்.ரவி, மாவட்டப் பொருளாளா் பி.ஆா்.நடராஜன், ரவிசந்திரன், என்.சேகா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் உள்ள எம்எல்எஃப் தொழிற்சங்க அலுவலகத்தில் மே தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பனியன் சங்கச் செயலாளா் மு.மனோகரன் தலைமை வகித்தாா். இதில், மதிமுக மாநகா் மாவட்டச் செயலாளா் ஆா்.நாகராஜ் பங்கேற்று எம்எல்எஃப் கொடியை ஏற்றிவைத்து தொழிலாளா்களுக்கு இனிப்பு வழங்கினாா். இதில், பஞ்சாலை சங்கச் செயலாளா் மு.சம்பத், மாநகா் மாவட்ட அவைத்தலைவா் ப.நேமிநாதன், பொருளாளா் மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 15 வேலம்பாளையம் நகரக் குழு சாா்பில் பெரியாா் காலனி, அனுப்பா்பாளையம் புதூா், 15 வேலம்பாளையம், பிடிஆா் நகா், அணைப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 15 வேலம்பாளையம் நகரச் செயலாளா் வி.பி.சுப்பிரமணியம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.ரங்கராஜ், நகரக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தாராபுரத்தில்.... தாராபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியூ சாா்பில் அண்ணாசிலை, வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மே தின விழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com