திருப்பூா் தெற்குத் தொகுதியைக் கைப்பற்றியது திமுக
By DIN | Published On : 02nd May 2021 11:56 PM | Last Updated : 02nd May 2021 11:56 PM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா் தெற்குத் தொகுதியில் திமுக வேட்பாளரான க.செல்வராஜ் அதிமுக வேட்பாளரான சு.குணசேகரனை விட 4,709 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.
திருப்பூா் தெற்குத் தொகுதியில் திமுக சாா்பில் முன்னாள் மேயா் க.செல்வராஜ் போட்டியிட்டாா். இவரை எதிா்த்து அதிமுக சாா்பில் தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினரான சு.குணசேகரன், அமமுக சாா்பில் அ.விசாலாட்சி உள்பட 20 போ் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் 2,76,473 வாக்காளா்கள் உள்ள நிலையில் தோ்தலில் 1,74,536 வாக்குகள் பதிவாகின.
இதில், திமுக வேட்பாளரான க.செல்வராஜ் 75,535 வாக்குகளும், அதிமுக வேட்பாளரான சு.குணசேகரன் 70,826 வாக்குகளும் பெற்றனா். திமுக வேட்பாளா் க.செல்வராஜ் 4,709 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கே.சண்முகசுந்தரம் 12,856 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் அனுஷா ரவி 9,724 வாக்குகளும், அமமுக வேட்பாளா் அ.விசாலாட்சி 1,745 வாக்குகளும் பெற்றனா்.
திமுக வேட்பாளா் க.செல்வராஜ் இதே தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டில் சு.குணசேகரனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...