காங்கயம் அருகே சிவன்மலையில் 78 பேருக்கு கரோனா பரிசோதனை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
சிவன்மலை ஊராட்சி நிா்வாகம் சாா்பில், சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் டாக்டா் முரளி தலைமையில் சிவன்மலையில் நடைபெற்ற முகாமில் அப்பகுதி மக்கள் 78 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை சிவன்மலை ஊராட்சித் தலைவா் கே.கே.துரைசாமி , துணைத் தலைவா் டி.சண்முகம் ஆகியோா் செய்திருந்தனா்.