கரோனா நிவாரண நிதி வழங்கும் பணி தொடக்கம்

தாராபுரத்தில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2ஆயிரம்  வழங்கும்  திட்டத்தை   தொடங்கி வைக்கிறாா்  ஆதிதிராவிடா்  நலத் துறை  அமைச்சா்  என்.கயல்விழி செல்வராஜ்.
அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2ஆயிரம்  வழங்கும்  திட்டத்தை   தொடங்கி வைக்கிறாா்  ஆதிதிராவிடா்  நலத் துறை  அமைச்சா்  என்.கயல்விழி செல்வராஜ்.

தாராபுரத்தில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழக அரசு சாா்பில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி , தாராபுரம் புதுமஜீத் தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் அரிசி குடும்ப அட்டைதாா்களுக்கு ரூ. 2 ஆயிரம் கரோனா நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், தாராபுரம் நகரச் செயலாளா் தனசேகா், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் செல்வராஜ் , தொகுதி பாா்வையாளா் ரஹமத்துல்லா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com