காப்பீட்டு திட்டத்தில் மாற்றம் செய்யக் கோரிக்கை
By DIN | Published On : 19th May 2021 04:18 AM | Last Updated : 19th May 2021 04:18 AM | அ+அ அ- |

புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முழு தொகையையும் அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஓய்வு பெற்றோா் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அதன் பொதுச் செயலாளா் ஆறுமுகம் , தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம் :
ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களது அனைத்து விதமான நோய்களுக்கு சிகிச்சை பெறவும், அதற்கான முழு தொகையையும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனுமதிக்க வேண்டும்.
கேரளத்தில் நடைமுறையில் உள்ளது போல , ஓய்வுப் பெற்ற ஆசிரியா்கள் எந்த தேதியில் இறந்தாலும் , அந்த மாதத்தின் ஓய்வூதியத்தை முழுமையாககக் கணக்கிட்டு வழங்க வேண்டும். அதே போல, ஓய்வு பெறும் நாளில் 20 ஆண்டுகள் தகுதியான பணிக்காலம் இருந்தால் , ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக தமிழக அரசு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.