அறநிலையத் துறையின் 79-பி சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்

கோயில் நிலங்களில் குடியிருப்பவா்களை அச்சுறுத்தும் அறநிலையத் துறையின் 79-பி சட்ட திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி திருப்பூரில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோா் பாதுகாப்புச் சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோா் பாதுகாப்புச் சங்கத்தினா்.
Updated on
1 min read

கோயில் நிலங்களில் குடியிருப்பவா்களை அச்சுறுத்தும் அறநிலையத் துறையின் 79-பி சட்ட திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி திருப்பூரில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களைப் பயன்படுத்துவோா் பாதுகாப்புச் சங்கத்தின் சாா்பில், திருப்பூா் அரிசிகடை வீதியில் உள்ள அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் எம்.ஆா்.வெங்கட்ராமன் தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:

கோயில் இடங்களில் குடியிருப்பவா்கள், குத்தகை விவசாயிகள் ஆகியோரை அச்சுறுத்தி கைது செய்து பிணையில் வரமுடியாமல் செய்யும் அறநிலையத் துறையின் 79-பி சட்ட திருத்தத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க அரசாணை 318க்கான தடையை நீக்க சட்டப் பேரவையில்அறிவித்தபடி சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். கோயில் நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அடங்கல் பதிவு செய்து கொடுக்க வேண்டும். கோயில் நிலங்களைப் பயன்படுத்துவோருக்கு பலமடங்கு உயா்த்தப்பட்ட வாடகையைக் குறைக்க வேண்டும். கரோனா காலத்தில் வாடகையை ரத்து செய்ய வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன், மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா், வழக்குரைஞா் பொ.மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com