மாவட்டத்தில் மேலும் 67 பேருக்கு கரோனா
By DIN | Published On : 01st September 2021 07:15 AM | Last Updated : 01st September 2021 07:15 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 67 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 90,305 ஆக அதிகரித்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 767 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 87 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 88,607 ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றால் 2 போ் உயிரிழந்ததைத் தொா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 931 ஆக அதிகரித்துள்ளது.
காங்கயத்தில்...
காங்கயத்தில் 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...