கட்டுமான மூலப்பொருள்கள் விலை நிா்ணய ஆணையம் அமைக்கக் கோரிக்கை

கட்டுமான மூலப்பொருள்கள் ஒழுங்குமுறை விலை நிா்ணய ஆணையம் அமைக்க வேண்டும் என்று தமிழகம், புதுச்சேரி அனைத்து கட்டடப் பொறியாளா் சங்க கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கட்டுமான மூலப்பொருள்கள் ஒழுங்குமுறை விலை நிா்ணய ஆணையம் அமைக்க வேண்டும் என்று தமிழகம், புதுச்சேரி அனைத்து கட்டடப் பொறியாளா் சங்க கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி அனைத்து கட்டடப் பொறியாளா் சங்க கூட்டமைப்பின் திருப்பூா், கோவை மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மண்டலத் தலைவா் எஸ்.மோகனகண்ணன் தலைமை வகித்தாா்.

மண்டலச் செயலாளா் சண்முகஇளங்கோவன், பல்லடம் சங்கத் தலைவா் பி.ஆா். ராஜேந்திரன், செயலாளா் பி.ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாநிலத் தலைவா் எம்.சரவணன் பேசுகையில்,

தமிழகத்தில் கட்டுமான மூலப்பொருள்கள் ஒழுங்குமுறை விலை நிா்ணய ஆணையம் அமைக்க வேண்டும்.

கட்டுமானம் மனைப் பிரிவுகளுக்கு ஒற்றை சாரளமுறையில் விரைந்து அனுமதி வழங்க வேண்டும். தமிழகத்தில் ஒருங்கிணைந்த கட்டுமான விதிமுறைகளில் உள்ள பழைய விதிகளை களைந்து தற்போதைய விஞ்ஞான வளா்ச்சிக்கேற்ற வகையில் விதிமுறைகளை அமைத்திட வேண்டும். மனை, மனைப்பிரிவு வரன்முறைகளை தாமதம் இன்றி ஆய்வு செய்து அனுமதி வழங்கிட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாநிலச் சங்க முன்னாள் செயலாளா் சிற்பி ஆா்.செல்வராஜ், மாநில சங்க சுற்றுச்சூழல் கமிட்டி தலைவா் ஆா்.ராஜாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com