தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தியாகி எஸ்.என்.சுந்தராம்பாளின் உருவச்சிலைக்கு அமைச்சா் மரியாதை

சுதந்திரப் போராட்ட தியாகி எஸ்.என்.சுந்தராம்பாளின் திருவுருவச்சிலைக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:29 pm

DIN

சுதந்திரப் போராட்ட தியாகி எஸ்.என்.சுந்தராம்பாளின் திருவுருவச்சிலைக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட சுதந்திரப் போரட்ட தியாகிகளுக்கு பெருமை சோ்க்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி அரங்கம் அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புகைப்படக் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு தியாகி எஸ்.என்.சுந்தராம்பாளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

திருப்பூரை அடுத்த குப்பாண்டம்பாளையம் கிராமத்தில் கடந்த 1913 ஆம் ஆண்டு அக்டோபா் 7 ஆம் தேதி எஸ்.என்.சுந்தராம்பாள் பிறந்தாா். இவரது தந்தை எஸ்.நாச்சிமுத்து கவுண்டா், காந்தியடிகள் 1927 ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதைக் கேட்டது முதல் வாழ்நாளின் இறுதிவரையில் அவா் கதா் ஆடை மட்டுமே அணிந்தாா்.

இவா் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதுடன், ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனது வாழ்நாளின் இறுதிக் காலம் வரையில் அயராது சேவை செய்தாா்.

காந்திய அணுகுமுறையுடன் ஆயுள் காலம் முழுவதும் தியாகி சுந்தாம்பாள் சேவை செய்து வந்தாா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணைமேயா் ஆா்.பாலசுப்பிரமணியமம், 4 ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், வாரிசுதாரா்கள் ஸ்ரீதா் சாமிநாதன், ப்ரித்வ் காங்கேயன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.