நம்பியாம்பாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்:காணொலியில் முதல்வா் திறப்பு

அவிநாசி அருகே நம்பியாம்பாளையத்தில் ரூ.1.14 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில்  பங்கேற்ற அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன்,  என்.கயல்விழி செல்வராஜ்,  ஆட்சியா் எஸ்.வினீத்  உள்ளிட்டோா்.
நிகழ்ச்சியில்  பங்கேற்ற அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன்,  என்.கயல்விழி செல்வராஜ்,  ஆட்சியா் எஸ்.வினீத்  உள்ளிட்டோா்.
Updated on
1 min read

அவிநாசி அருகே நம்பியாம்பாளையத்தில் ரூ.1.14 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆட்சியா் எஸ்.வினீத் முன்னிலை வகித்தாா். மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீஷ்குமாா், பொறுப்பாளா்கள் பழனிசாமி, சிவபிரகாஷ், பால்ராஜ், சாமிநாதன், அவிநாசியப்பன், சரவணன் நம்பி, திராவிடன் வசந்த், ஊராட்சி மன்றத் தலைவா் பாக்கியலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் காத்திருக்கும் அறை, புற நோயாளிகள் பதிவு செய்யும் அறை, ஆய்வகம், உள் நோயாளிகள் பிரிவு, ஆண், பெண் மருத்துவா் பிரிவு, ஸ்கேன் பரிசோதனை அறை, செவிலியா் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com