

காங்கயம்: காங்கயத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் பேருந்து நிலையம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கயம் அதிமுக நகரச் செயலர் வெங்கு ஜி. மணிமாறன் தலைமை வகித்து, எம்ஜிஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அதிமுக கட்சியின் மாவட்ட வர்த்தக அணியின் துணைச் செயலர் என்.பாலகிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலர் ஏ.பி.துரைசாமி, நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் சி.கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.