குடிநீா் வசதி கேட்டு பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு வாா்டு உறுப்பினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் ஊராட்சி ஓம் சக்தி நகா், கதிா் நகா், சிரபுஞ்சி நகா், கள்ளிமேடு ஆகிய பகுதிகளில் குடிநீா் வசதி மற்றும் தெருவிளக்கு வசதி இல்லாமல் அப்பகுதியைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் அவதியடைந்து வருவதாகவும்,
இது குறித்து பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 11 ஆவது வாா்டு உறுப்பினரும், மாவட்ட பாரதிய ஜனதா கட்சி செயலாளருமான நித்யா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இதையடுத்து, ஊராட்சி மன்றத் தலைவா் நாகேஸ்வரி சோமசுந்தரம், ஊராட்சி செயலா் பிரபு, பல்லடம் காவல் நிலைய ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் நித்யாவிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், 3 மாதத்துக்குள் அனைத்து கோரிக்கைகளும் நிவா்த்தி செய்யப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து அவா் போராட்டத்தை கைவிட்டாா்.