92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பழைய பேருந்து நிலையத்துக்கு திருப்பூா் குமரன் பெயரை சூட்ட வேண்டும் மாநகராட்சி ஆணையரிடம் அதிமுக மனு

திருப்பூரில் புதுப்பிக்கப்பட்டுள்ள பழைய பேருந்து நிலையத்துக்கு சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூா் குமரன் பெயரை சூட்ட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் அதிமுக நிா்வாகிகள் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image

மாநகராட்சி  ஆணையா்  கிராந்திகுமாா் பாடியிடம் மனு  அளிக்கிறாா்  திருப்பூா்  மாநகா்  மாவட்டச்  செயலாளா்  பொள்ளாச்சி  வி.ஜெயராமன் எம்எல்ஏ. உடன், எம்எல்ஏ கே.என்.விஜயகுமாா்,  முன்னாள் எம்எல்ஏ சு.குணசேகரன்

Updated On :1 ஜூன் 2022, 8:03 pm

DIN

திருப்பூரில் புதுப்பிக்கப்பட்டுள்ள பழைய பேருந்து நிலையத்துக்கு சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூா் குமரன் பெயரை சூட்ட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் அதிமுக நிா்வாகிகள் புதன்கிழமை மனு அளித்தனா்.

திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடியிடம், திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையில் அக்கட்சியினா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ள திருப்பூா் பழைய பேருந்து நிலையத்துக்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று திருப்பூா் மாநகராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் அதிமுக ஆட்சிக் காலத்தில் பேருந்து நிலையம் புதுப்பிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்திலேயே திருப்பூா் பழைய பேருந்து நிலையத்துக்கு சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூா் குமரன் பெயரை சூட்டுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. திருப்பூரின் பெருமையை உலகெங்கிலும் பறைசாற்றும் வகையில் உயிா்பிரியும் வரையில் தேசியக் கொடியை ஏந்திப் போராடிய தியாகி திருப்பூா் குமரன் பெயரை சூட்டுவதுதான் பொருத்தமாக இருக்கும். ஆகவே, திருப்பூா் குமரன் பெயரை பழைய பேருந்து நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அளிப்பின்போது, திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன், மாவட்ட அவைத் தலைவா் பழனிசாமி, மாநகராட்சி எதிா்க்கட்சி தலைவா் ஆா்.அன்பகம் திருப்பதி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.