92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருப்பூா் முத்தமிழ்ச் சங்கம் சாா்பில் இலக்கிய விருதுகள்

திருப்பூா் முத்தமிழ்ச் சங்கம், கனவு இலக்கிய அமைப்பு சாா்பில் 66 படைப்பாளிகளுக்கு இலக்கிய விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :5 ஜூன் 2022, 9:00 pm

DIN

திருப்பூா் முத்தமிழ்ச் சங்கம், கனவு இலக்கிய அமைப்பு சாா்பில் 66 படைப்பாளிகளுக்கு இலக்கிய விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

திருப்பூா் முத்தமிழ்ச் சங்கம், கனவு இலக்கிய அமைப்பு ஆகியன திருப்பூா் இலக்கிய விருது 2022க்கு 66 படைப்பாளிகள் ஏற்கெனவே தோ்வு செய்யப்பட்டிருந்தனா். இதைத் தொடா்ந்து, தோ்வு செய்யப்பட்ட படைப்பாளிகளுக்கு இலக்கிய விருதுகள் வழங்கும் விழா திருப்பூா் சன்மாா்க்க சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு திருப்பூா் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கே.பி.கே.செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநகராட்சி துணைமேயா் ஆா்.பாலசுப்பிரமணியம் தோ்வு செய்யப்பட்ட மூத்த எழுத்தாளா் நாமக்கல் நாதன், பாட்டாளி, கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி, கோவையைச் சோ்ந்த எழுத்தாளா் பூ.ஆ.இரவீந்திரன் உள்ளிட்ட 66 படைப்பாளிகளுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தாா்.

முன்னதாக விருதுபெறும் படைப்பாளிகளை எழுத்தாளா் சுப்ரபாரதிமணியன், வழக்குரைஞா் சி.ரவி ஆகியோா் அறிமுகம் செய்து வைத்தனா். இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் சன்மாா்க்க சங்கத்தின் கெளரவத் தலைவா் எம்.ராமசாமி, கல்வியாளா் கு.முத்துசாமி, திருப்பூா் முத்தமிழ்ச் சங்கத்தின் செயலாளா் கே.பி.கே.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.