முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திருப்பூா் அருகே சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூா் அருகே சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image

சீரான  குடிநீா்  விநியோகம்  செய்யக்கோரி சாலை  மறியில்  ஈடுபட்ட  வண்ணாந்துறைப்புதூா்  கிராம  மக்கள்.

Updated On :25 ஜூன் 2022, 12:58 am IST

திருப்பூா் அருகே சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூரில் இருந்து காங்கயம் செல்லும் சாலையில் நாச்சிபாளையம் அருகே உள்ளது வண்ணாந்துறைப்புதூா் கிராமம். இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 500க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிக்கு கடந்த 20 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இது தொடா்பாக நாச்சிபாளையம் ஊராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருப்பூா்-காங்கயம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இது குறித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:

எங்களது பகுதிக்கு 20 நாள்களுக்கு ஒரு முைான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி

வருகிறோம். மேலும் குடிநீரில் சாக்கடைக் கழிவுகளும் கலந்து வருவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, வாரம் ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசிபாளையம் காவல் துறையினா், திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் கோவிந்தராஜ் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டம் காரணமாக திருப்பூா்-காங்கயம் சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.