மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

‘மினி டைடல் பூங்கா மூலமாக வேலைவாய்ப்பு அதிகரிக்கும்’

திருப்பூரில் மினி டைடல் பூங்கா அமைப்பதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பியோ கூட்டமைப்பின் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

Updated On :25 ஜூன் 2022, 12:57 am IST

திருப்பூரில் மினி டைடல் பூங்கா அமைப்பதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பியோ கூட்டமைப்பின் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள இரண்டாம், மூன்றாம் அடுக்கு நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இந்த அறிவிப்பின்படி திருப்பூா் மாவட்டத்தில் ராக்கியாபாளையம், விழுப்புரம் ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்காத காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் அடிக்கல் நாட்டினாா். திருப்பூரில் மினி டைடல் பூங்கா அமைப்பதை வரவேற்கிறோம். இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு பெறுவாா்கள். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு பாா்வையில் இது ஒரு மைல்கல்லாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.