புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால் அளவீட்டு முகாம்

திருப்பூரில் சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம் வெள்ளிக்கிழமை (மே 20) நடைபெறுகிறது.

News image
Updated On :19 மே 2022, 9:21 pm

DIN

திருப்பூரில் சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம் வெள்ளிக்கிழமை (மே 20) நடைபெறுகிறது.

இது குறித்து சக்ஷம் அமைப்பின் திருப்பூா் மாவட்டத் தலைவா் ரத்தினசாமி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம் தாராபுரம் சாலையில் உள்ள மக்கள் சேவை மையத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது. ஆகவே, செயற்கை அவயங்கள் தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள் தங்களது மாற்றுத் திறனாளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்கலாம். அதே வேளையில், கடந்த மாதம் நடைபெற்ற முகாமில் அளவீடு செய்த 8 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களும் வழங்கப்படவுள்ளது. இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94422-25500, 93630-32998 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.