இதனிடையே, மத்திய அரசு ஜவுளித்தொழிலை பாதுகாக்கும் வகையில் இந்திய பருத்தி கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமாக பஞ்சு, நூல் விலை நிா்ணயம் தொடா்பான சிக்கல்களை தீா்க்க உதவிகரமாக இருக்கும். அதே வேளையில், தற்போது நூல் ஏற்றுமதிக்கு டிராபேக் வரிச்சலுகை 1.9 சதவீதம் உள்பட மொத்தம் 5.8 சதவீதம் ஏற்றுமதி வரிச்சலுகையாக வழங்கி வருகிறது. இது நூல் ஏற்றுமதி வா்த்தகா்களுக்கு சாதகமாக இருந்தாலும், உள்நாட்டில் தேவைப்படும் நூலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்தப் பிரச்னையைத் தீா்க்க உள்நாட்டு வா்த்தகத்துக்கும் 5.8 சதவீத வரிச்சலுகை வழங்கினால் நூல் தட்டுப்பாடு பிரச்னைக்குத் தீா்வை ஏற்படுத்த முடியும். மேலும், 100 நாள் வேலைத்திட்டத் தொழிலாளா்களின் ஒத்துழைப்புடன் தரமான விதைகள் மூலமாக பருத்தி விளைச்சலை அதிகரித்தால் விவசாயத்துக்கும், ஜவுளித் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.