புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் நீா்நிலைகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்க விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களிடம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 மே 2022, 12:33 am

DIN

திருப்பூா் மாவட்டத்தில் நீா்நிலைகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்க விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களிடம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 32 நீா்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயப் பணிகளுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவது குறித்து மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆகவே, வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி கோரும் விண்ணப்பங்களை உடனடியாகப் பரிசீலனை செய்து, ஆணை பிறக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள வேளாண்மை இயக்குநா்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்து தகுதியின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.