முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 17,094 பேருக்கு சிகிச்சை: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 17,094 பேருக்கு ரூ.48 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித
Updated on
1 min read

திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 17,094 பேருக்கு ரூ.48 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது திருப்பூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாராபுரம், உடுமலை, காங்கயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம், ஊத்துக்குளி உள்ளிட்ட 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் 28 தனியாா் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலமாக 5,29,428 பேருக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு அக்டோபா் 11 ஆம் தேதி வரையில் 17,094 பேருக்கு ரூ.48 கோடி மதிப்பில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை எடுக்காதவா்கள் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்குள்) ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 3 இல் வேலைநாள்களில் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com