

காங்கயம் அருகே சிவன்மலையில் தனியாா் துறை வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிா் திட்டம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு காங்கயம் ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில், 20க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன.
இதில், சிவன்மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், இளைஞா்கள் கலந்துகொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் காங்கயம் ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜே.ஜீவிதா ஜவஹா், சிவன்மலை ஊராட்சித் தலைவா் கே.கே.துரைசாமி, துணைத் தலைவா் டி.சண்முகம், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் உதவித் திட்ட அலுவலா் சி.முத்து, வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் சந்தியாவல்லி, சௌந்தரம், ஜோதிமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.