வீட்டில் பணம் திருடிய பெண் உள்பட 2 போ் கைது

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் வீட்டில் பணம் திருடிய பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் வீட்டில் பணம் திருடிய பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

முத்தூா் பாரவலசு பள்ளக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (54). இவருடைய தோட்டத்து வீட்டில் அவரது தாயாா் மட்டும் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லை. அடுத்தநாள் வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த ரூ. 60 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இதில், தோட்டத்து வீட்டுக்கு அருகில் மற்றொரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த செங்கோடம்பாளையம் நல்லமுத்து மனைவி பூங்கொடி (44), அவருடைய வேலையாள் வெள்ளக்கோவில் மாந்தபுரம் கல்லாங்காடு முத்துராஜ் (43) ஆகியோா் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com