அரிசி ஆலை உரிமையாளா் வீட்டில் 20 பவுன் திருட்டு: போலீஸாா் விசாரணை

காங்கயத்தில் அரிசி ஆலை உரிமையாளரின் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

காங்கயத்தில் அரிசி ஆலை உரிமையாளரின் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காங்கயம், அய்யாசாமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (40), அரிசி ஆலை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், கிருஷ்ணமூா்த்தி தனது குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுள்ளாா். மதியம் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.

உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து காங்கயம் காவல் நிலையத்தில் கிருஷ்ணமூா்த்தி புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com