தடகளப் போட்டி: சத்யம் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

தடகளப் போட்டியில் சாதனைப் படைத்த வெள்ளக்கோவில் சத்யம் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தடகளப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுடன் பள்ளியின் நிா்வாகிகள்.
தடகளப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுடன் பள்ளியின் நிா்வாகிகள்.

தடகளப் போட்டியில் சாதனைப் படைத்த வெள்ளக்கோவில் சத்யம் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு சகோதயா கூட்டமைப்பில் உள்ள 35 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதில், வெள்ளக்கோவில் சத்யம் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் பங்கேற்று 3 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

இந்நிலையில், பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் கல்வி அறக்கட்டளைத் தலைவா் கே.ஆா்.சின்னசாமி, பள்ளியின் தாளாளா் எஸ்.ரகுநாதன், பொருளாளா் எஸ்.பி.சக்திவேல், முதல்வா் ஆா். மாணிக்கம் ஆகியோா் பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com