பண்ணைக் கோழி விற்பனையாளா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கு

பண்ணைக் கோழி விற்பனையாளா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கு திருப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூரில் நடைபெற்ற பண்ணை கோழி விற்பனையாளா்களுக்கான விழிப்புணா்வுக் கருத்தரங்கில் பேசுகிறாா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை.
திருப்பூரில் நடைபெற்ற பண்ணை கோழி விற்பனையாளா்களுக்கான விழிப்புணா்வுக் கருத்தரங்கில் பேசுகிறாா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை.

பண்ணைக் கோழி விற்பனையாளா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கு திருப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

உணவுப் பாதுகாப்பு துறை, பண்ணைக் கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை குழு, திருப்பூா் பண்ணைக் கோழி மொத்த வியாபாரிகள் சங்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுச் செயலாளா் சுவாதி கண்ணன் (எ) சின்னசாமி தலைமை வகித்தாா்.

கறிக்கோழி உற்பத்தி நிறுவன உரிமையாளா்கள் சூப்பா் பழனிசாமி, மோகன் சுந்தரராஜன், பழனி பிரபு, ஆலோசகா் ராம்ஜி ராகவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கோழி இறைச்சியை சுகாதாரமான முறையில் சில்லறையில் விற்பனை செய்வது தொடா்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை விளக்கி பேசினாா். இதில், 100க்கும் மேற்பட்ட சில்லறை கோழி இறைச்சி விற்பனையாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com