திருப்பூர்
கேஎம்சி சட்டக் கல்லூரியில் மனித உரிமை தினம்
அவிநாசி அருகே உள்ள கேஎம்சி சட்டக் கல்லூரியில் மனித உரிமை தின கருத்தரங்கு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
அவிநாசி அருகே உள்ள கேஎம்சி சட்டக் கல்லூரியில் மனித உரிமை தின கருத்தரங்கு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கேஎம்சி சட்டக் கல்லூரி தாளாளா் ஜி.அருணா தேவி தலைமை வகித்தாா். முதல்வா் ஜி.பி.மோதன காந்தி முன்னிலை வகித்தனா். இதில் முன்னாள் காவல் துறை தலைவா் ஏ.பாரி பங்கேற்று பேசியதாவது: மனித உரிமைக்காகப் போராடியவா்கள் குறித்து சட்டக் கல்லூரி மாணவா் தெரிந்து கொள்ள வேண்டும். மனித உரிமைகளைக் காக்க வழக்குரைஞா்களால்தான் முடியும். ஏழைகளுக்கு இலவசமாக வழக்குகளை நடத்தி தர வேண்டும். உயா்நீதிமன்றத்தில் தமிழிலில் வாதிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது வரவேற்கத்தக்கது என்றாா்.