தாராபுரத்தில் ஜீவஜோதி பாா்வையற்றோா் அறக்கட்டளை துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு அறக்கட்டளையைத் தொடக்கிவைத்து, உரையாற்றினாா்.
இதில், திமுக தாராபுரம் நகரச் செயலா் சு.முருகானந்தம், மூலனூா் மேற்கு ஒன்றியச் செயலா் துரை.தமிழரசு, மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் க.செல்வராஜ், மாவட்ட துணைச் செயலா் பிரபாவதி பெரியசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.