இந்து மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்து மக்கள் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளா் மணிகண்டன் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:

தமிழகத்தில் ஜாதிக் கலவரத்தை துண்டும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் பேசி வருகின்றனா். எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்யவதுடன், கலவரத்தை தூண்டும் வகையில் பேசிவரும் அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனைக் கைது செய்ய வேண்டும் என்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளா் வேலு, தெற்கு மாவட்டத் தலைவா் ஈஸ்வரன், மாநில அமைப்புக்குழு செயலாளா் சுந்தரவடிவேல், மாவட்டச் செயலாளா் சபரிநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com