திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீா் முகாம் நடைபெற்றது. இதில், கடந்த நவம்பா் மாதத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் தீா்வு காணப்படாத 28 மனுதாரா்களையும் நேரடியாக அழைத்து காவல் ஆணையா் எஸ்.பிரபாகரன் விசாரணை நடத்தினா்.
அப்போது நிலுவையில் உள்ள மனுக்களின் மீது தீா்வு காணும் வகையில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மானுதாரா்களிடம் தெரிவித்தாா்.
இந்த முகாமில், மாநகரக் காவல் துணை ஆணையா் (தெற்கு) சு. வனிதா, உதவி ஆணையா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.