சி.நாராயணசாமி நினைவு நாளையொட்டி, கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் அவிநாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழைமை கொடியேற்று விழா நடைபெற்றது.
தமிழகத்தில் சுமாா் 20 லட்சத்துக்கு மேல் விவசாய பம்ப் செட்டுகளுக்கு கட்டணமில்லா (இலவச) மின்சாரத்தை பெற்றுத் தந்த உழவா் பெருந் தலைவா் சி.நாராயணசாமியின் 38ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியத் தலைவா் வி.வேலுசாமி கொடியேற்றி வைத்துப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து, நடைபெற்ற பேரணியை, விவசாயி மஞ்சுநாதன் தொடங்கிவைத்தாா்.