பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அவிநாசியில் விஏஓ லஞ்சம் பெறுவது தொடர்பான பட்டியலால் பரபரப்பு

கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெறுவது தொடர்பான விபர பட்டியல் குறித்து பேனர் வைக்கப்பட்டதால் அவிநாசியில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Published On :

அவிநாசி: கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெறுவது தொடர்பான விபர பட்டியல் குறித்து பேனர் வைக்கப்பட்டதால் அவிநாசியில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வருவாய் வட்டத்திற்கு உள்பட்ட ஒரு கிராமத்தில் இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றிற்கு, கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெறுவது தொடர்பாக, பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அந்த பேனரில், முக்கிய அறிவிப்பு எனக் குறிப்பிட்டு, மணிகாரர் அம்மாவிடம் சென்று யாரும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம் (விலை பட்டியல் எனக் குறிப்பிட்டு பட்டா சிட்டா, இறப்புச் சான்றிதழ், அடங்கல், வாரிசு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் பெறுவதற்கு(ரூ. 72,000 எனக் குறிப்பிட்டு), திருமண பதிவு சான்றிதழ், இடம் அளந்து கொடுக்க, இருப்பிட சான்றிதழ், விதவை சான்றிதழ், கணவரால் கைவிடபட்டவர் (சான்றிதழ்), பிறப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என பட்டியல் அடக்கிய பேனர் வைக்கப்பட்டதால் அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.