தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி! இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

பெருமாநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் மூடப்படாத குழியால் விபத்து அபாயம்

அவிநாசி அருகே பெருமாநல்லூர் பிரதான பேருந்து நிறுத்தத்தில் மூடப்படாத குழியால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

News image
Updated On :19 ஜூலை 2022, 11:25 am IST

அவிநாசி: அவிநாசி அருகே பெருமாநல்லூர் பிரதான பேருந்து நிறுத்தத்தில் மூடப்படாத குழியால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெருமாநல்லூர் நான்கு வழிச்சாலை சந்திப்பு, ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை, குன்னத்தூர், கோபி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலையாக உள்ளது. மேலும் பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளிம்மன் கோயிலும், பெருமாநல்லூர் அருகே திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவும் உள்ளதால், அவ்வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். 

Story image

இந்நிலையில் பேருந்து நிறுத்தம் அருகே தோண்டி மூடப்படாத நிலையில் உள்ள குழியால், மக்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: 

பேருந்துக்காக பயணிகள் காத்திருக்கும் இடத்தில், தனியார் நிறுவனத்தினர் கேஸ் குழாய் பதிக்கும் பணிக்காக 12 அடி ஆழத்தில் குழி தோண்டினர். இதில் இரவு நேரத்தில், குழாய் வழியே பவுடர் கலந்த நீரை கடந்த 10 நாள்களாக வெளியேற்றுவதால், அந்த இடம் முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. குறிப்பாக குழி முழுவதும் நீரால் நிரப்பியுள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. 

ஆகவே உடனடியாக குழியை மூடி பாதையை சரி செய்ய வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.