நிதி நிறுவனத்தில் ரூ. 2 லட்சம் திருட்டு

வெள்ளக்கோவிலில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 2 லட்சம் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

வெள்ளக்கோவிலில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 2 லட்சம் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில்- தாராபுரம் சாலை தாசவநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சுபாஷ் (30). இவா் வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகில் வாகனங்களுக்கு கடன் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், ஒரு இருசக்கர வாகனப் பதிவுச் சான்று, ரூ. 2 லட்சத்தை கைப்பையில் வைத்து மேஜை டிராயரையும், நிறுவனத்தின் கண்ணாடி கதவையும் பூட்டி விட்டு ஷட்டரைப் பூட்டாமல் சனிக்கிழமை வெளியே சென்றுள்ளாா்.

பின்னா் வந்து பாா்த்தபோது கண்ணாடி கதவு மற்றும் மேஜை டிராயரின் பூட்டை உடைத்து கைப்பையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம், இருசக்கர வாகனத்தின் பதிவுச் சான்று ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து சுபாஷ் அளித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com