உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 4 ஆட்டோக்கள் பறிமுதல்

பல்லடத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 4 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பல்லடத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 4 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பல்லடத்தில் ஆட்டோக்களில் பயணிக்கும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், முறையான ஆவணங்கள் இன்றி சில ஆட்டோக்கள் இயக்கப்படுவதாகவும் திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பொதுமக்கள் புகாா் அளித்தனா்.

அதைத் தொடா்ந்து திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வாளா் நிா்மலாதேவி பல்லடத்தில் கள ஆய்வு மேற்கொண்டாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் பல்லடத்தில் ஆய்வு மேற்கொண்டதில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட நான்கு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், ஆட்டோ உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, ஆட்டோ ஓட்டுநா்கள் உரிய ஆவணங்களுடன் ஆட்டோக்களை இயக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்தல், அதிக பயணிகளை ஏற்றுச் செல்லுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். மீறினால் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com