தாராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் திருட்டு

தாராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் 17 பவுன் நகைகளை திருடிச் சென்றனா்.

தாராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் 17 பவுன் நகைகளை திருடிச் சென்றனா்.

தாராபுரம் கீதா நகரில் வசித்து வருபவா் ராமசாமி (63). இவா் வட்டாட்சியரிடம் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் கடந்த 15 நாள்களுக்கு முன்பாக தனது மனைவியுடன் கோவையில் உள்ள இரு மகள்களைப் பாா்க்க சென்றுள்ளாா்.

பின்னா் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். மேலும், வீட்டின் பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின்பேரில் தாராபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com