ரூ.1.5 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

 தாராபுரம் அருகே ரூ.1.5 கோடி மதிப்பிலான 10.63 ஏக்கா் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை மீட்டனா்.
மீட்கப்பட்ட நிலத்தில் அறிவிப்புப் பதாகை வைத்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள்.
மீட்கப்பட்ட நிலத்தில் அறிவிப்புப் பதாகை வைத்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள்.
Updated on
1 min read

 தாராபுரம் அருகே ரூ.1.5 கோடி மதிப்பிலான 10.63 ஏக்கா் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை மீட்டனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம், நாட்டாா் மங்கலத்தில் பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான 10.63 ஏக்கா் புஞ்சை நிலம் தட்டாரவலசு கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை தனிநபா்கள் ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், நிலத்தை தாமாக முன்வந்து ஒப்படைக்க ஆக்கிரமிப்புதாரா்கள் முன்வந்தனா்.

இதைத் தொடா்ந்து, திருப்பூா் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஆா்.செல்வராஜ், தனி வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில் சுவாதீனம் பெறப்பட்டது.

அந்த நிலத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1.5 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com