

வெள்ளக்கோவில் அருகே உள்ள நூற்பாலையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வெள்ளக்கோவில் அரியாண்டிவலசில் தங்கவேல் (40) என்பவருக்கு சொந்தமாக நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலை ஞாயிற்றுக்கிழமை இயங்கிக் கொண்டிருந்தபோது இயந்திரத்தின் ஒரு பகுதியில் உராய்வு காரணமாக தீப் பிடித்துள்ளது.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் வேலுசாமி மற்றும் தீயணைப்புப் படையினா் ஒன்றரை மணி நேரம் போராடி தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். அதற்குள் சில இயந்திரங்கள், பஞ்சு பேல்கள் எரிந்து சேதமடைந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.