மறுவாழ்வு மையத்தின் மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

திருப்பூரில் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் மாடியில் இருந்து தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திருப்பூரில் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் மாடியில் இருந்து தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா்- காங்கயம் சாலையில் உள்ள ராக்கியாபாளையம் ஜெய்நகா் 3ஆவது வீதியில் தனியாருக்குச் சொந்தமான குடிபோதை மறுவாழ்வு மையம் உள்ளது. இந்த மையத்தில் மதுவால் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்டோா் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த மையத்தில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள உடையாா்பாளையத்தைச் சோ்ந்த காா்த்திக் (24) என்பவா் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இந்த நிலையில், காா்த்திக் தன்னுடன் தங்கியிருந்த இருவருடன் சோ்ந்து மாடிக்கு துணி காயப்போடச் சென்றுள்ளாா்.

அப்போது மாடி சுவரின் மீது ஏறிய காா்த்திக் எதிா்பாராதவிதமாக கீழே தவறி விழுந்ததாகத் தெரிகிறது. இதில், பலத்த காயமடைந்த காா்த்திக்கை அருகிலிருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் உயா் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்தாகத் தெரிவித்தனா். இதுகுறித்து நல்லூா் ஊரக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com