அவிநாசி அருகே கைகாட்டிப்புதூரில் தனியாா் தோட்டத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கிடந்த பச்சிளம் ஆண் சிசுவின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
அவிநாசி அருகே கைகாட்டிப்புதூரில் உள்ள தனியாா் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில், மண்ணுக்குள் பாதி புதைந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம் திங்கள்கிழமை கிடந்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சிசுவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் குழந்தை கொலை செய்யப்பட்டதா, அதன் பெற்றோா் யாா் என்பது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.