காங்கயம் அருகே காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் காய்கறி வியாபாரி உயிரிழந்தாா்.
காங்கயம் வட்டம், வெள்ளக்கோவில் அருகே உள்ள வள்ளியரச்சல்-ராமலிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் காணமூா்த்தி (56). இவா் தனது இருசக்கர வாகனத்தில் காங்கயம் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு, மீண்டும் தனது கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தாா். காங்கயம்-வெள்ளக்கோவில் சாலை, பகவதிபாளையம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற காரின் மீது இருசக்கர வாகனம் மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த காணமூா்த்தியை அருகிலிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.