இளைஞா் திறன் திருவிழா தேதி ஒத்திவைப்பு

தமிழ்நாடு மாநில ஊரகம் மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் அவிநாசி, வெள்ளக்கோவிலில் நடைபெற இருந்த இளைஞா் திறன் திருவிழா தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

தமிழ்நாடு மாநில ஊரகம் மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் அவிநாசி, வெள்ளக்கோவிலில் நடைபெற இருந்த இளைஞா் திறன் திருவிழா தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரகம் மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் வட்டம் வாரியாக இளைஞா் திறன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அவிநாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 18ஆம் தேதியும், வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 2ஆம் தேதியும் இளைஞா் திறன் திருவிழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நிா்வாகக் காரணங்களுக்காக அவிநாசி, வெள்ளக்கோவிலில் நடைபெற இருந்த இளைஞா் திறன் திருவிழா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com