பல்லடம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பின்னலாடை நிறுவனத் தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்த கரைப்புதூா் பகுதியில் வசித்து வந்தவா் பிரகாஷ் (27). இவா் அதே பகுதியைச் சோ்ந்த திருமணமான 30 வயது பெண்ணுடன் வசித்து வந்தாா். அந்தப் பெண்ணின் 13 வயது மகளும் அவா்களுடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், வீட்டில் தனியா இருந்த வளா்ப்பு மகளுக்கு பிரகாஷ் கடந்த ஜூன் 13ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயாா் பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் போக்ஸோ சட்டத்தில் பிரகாஷைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.