தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம் குண்டடத்தை அடுத்த முத்துக்கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் பூபதி (34). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 5ஆம் வகுப்பு பயின்று வந்த 11 வயது சிறுமியை கடந்த 2020 மே 26ஆம் தேதி தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் தாராபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி போக்ஸோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பூபதியை கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி நாகராஜன் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
அதில் போக்ஸோ சட்டத்தில் ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 20 ஆண்டுகள் என மொத்தம் 60 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்தத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.