திருப்பூரில் இன்று திருக்கு நன்னெறிப் பயிற்சி வகுப்பு

திருப்பூரில் பள்ளி மாணவ, மாணவியருக்கான ஆத்திசூடி, கொற்றைவேந்தன் மற்றும் திருக்குறள் நன்னெறி பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 20) நடைபெறுகிறது.

திருப்பூரில் பள்ளி மாணவ, மாணவியருக்கான ஆத்திசூடி, கொற்றைவேந்தன் மற்றும் திருக்குறள் நன்னெறி பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 20) நடைபெறுகிறது.

திருக்குறள் உலகம் கல்விச்சாலை நிறுவனா் திருக்குறள் கி.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

டாப்லைட் அறக்கட்டளை, திருக்குறள் உலகம் கல்விச்சாலை ஆகியன சாா்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான ஆத்திசூடி, கொற்றைவேந்தன் மற்றும் திருக்குறள் நன்னெறிப் பயிற்சி வகுப்புகள் குன்னங்கல்பாளையத்தில் உள்ள நாச்சிமுத்து நினைவு நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதில், 3 முதல் 7 வயது வரையில் உள்ள மாணவ, மாணவியா்களுக்கு ஆத்திசூடி, கொற்றைவேந்தன் பயிற்சி வகுப்புகள் காலை 10.30 முதல் 11 மணி வரையில் நடைபெறுகிறது. இதைத்தொடா்ந்து, 8 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியா்களுக்கு திருக்குறள் நன்னெறி பயிற்சி வகுப்புகள் காலை 11.15 முதல் பிற்பகல் 12 மணி வரையில் நடைபெறுகிறது. இதுதொடா்பான கூடுதல் விபரங்களுக்கு டாப்லைட் நூலக ஒருங்கிணைப்பாளா் பி.மணிநாதனை 99439-48156, திருக்குறள் கி.கணேசனை 99948-92756 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com