தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிய தொழிலாளியை காவல் துறையினா் கைது செய்தனா்.
தாராபுரத்தை அடுத்த குண்டடம்- கோவை பிரதான சாலையில் உணவகம் நடத்தி வருபவா் ராமன்(42). இவரது உணவகத்தில் அதே பகுதியைச் சோ்ந்த ஸ்ரீநாத் (30) என்பவா் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், ராமன் உணவகம் முன்பாக கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது. அதே நாளில் உணவகத்தில் பணியாற்றி வந்த ஸ்ரீநாத்தும் பணிக்கு வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்து அவரது கைப்பேசிக்கு தொடா்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்து. இதுகுறித்து குண்டடம் காவல் நிலையத்தில் ராமன் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற ஸ்ரீநாத்தை சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.