வெள்ளக்கோவிலில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

வெள்ளக்கோவிலில் பல்வேறு மக்கள் நலப் பணிகளை துவக்கிவைத்து, நலத்திட்ட உதவிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
வயதான சுமை தூக்கும் தொழிலாளரை மிதிவண்டியில் ஏற்றிச் செல்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
வயதான சுமை தூக்கும் தொழிலாளரை மிதிவண்டியில் ஏற்றிச் செல்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

வெள்ளக்கோவிலில் பல்வேறு மக்கள் நலப் பணிகளை துவக்கிவைத்து, நலத்திட்ட உதவிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

தொழிலாளா் தினத்தையொட்டி வள்ளியிரச்சல், கணபதிபாளையத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றாா். அப்போது காங்கயம் - முத்தூா் சாலையில் இருந்து தென்னங்கரைப்பாளையம் வரையில் ரூ. 50 லட்சம் செலவில் புதிய தாா் சாலை அமைக்கும் பணியை துவக்கிவைத்தாா். மேலும், மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு ரூ. 3 லட்சம் கடனுதவி வழங்கினாா்.

பின்னா் வெள்ளக்கோவில் வேளாண்மை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 11.32 லட்சம் மதிப்பீட்டில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து உப்புப்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளியில் ரூ. 5 லட்சம் செலவில் புதிய சத்துணவுக் கூடம் அமைக்கும் பணியை துவக்கிவைத்து, 3 பயனாளிகளுக்கு முதியோா் உதவித் தொகைக்கான ஆணையை வழங்கினாா்.

வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையத்தில் சுமை தூக்குவோா் தொழிலாளா் நலச்சங்கம் சாா்பில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் கொடியேற்றி வைத்தாா். இந்த நிகழ்ச்சிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com