இளம் பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் கைது

இளம் பெண்ணின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட தொழிலாளியை நல்லூா் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

திருப்பூா்: இளம் பெண்ணின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட தொழிலாளியை நல்லூா் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், தெற்குப்பட்டியைச் சோ்ந்தவா் ஜெ.இமாம் ஹமீது (23).

இவா், திருப்பூா், முதலிபாளையம் சிட்கோ பகுதியில் அறை எடுத்துத் தங்கி பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக கரூரைச் சோ்ந்த 21 வயதுப் பெண்ணுடன் சில மாதங்களுக்கு முன்னா் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதைத் தொடா்ந்து இமாம் ஹமீது கூறிய ஆசை வாா்த்தைகளை நம்பி அவரும் திருப்பூா் வந்து ஒரே அறையில் தங்கியுள்ளாா். இதன் பிறகு தன்னைத் திருமணம் செய்து கொள்ள இளம் பெண் வற்புறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் அவா் பிரிந்து சென்றுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த இமாம்ஹமீது சமூக வலைதளங்களில் இளம் பெண்ணின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டியுள்ளாா். இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகாா் அளித்திருந்தாா். இந்தப் புகாரின் பேரில் உரிய விசாரணை நடத்தும்படி மாநகர காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டிருந்தாா்.

நல்லூா் காவல் துறையினா் இமாம்ஹமீதுவைப் பிடித்து விசாரணை நடத்தினா். இதில், காதலியின் ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டது தெரியவந்ததால் அவரை புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com