காங்கயத்தில் ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 30 போ் கைது

காங்கயத்தில் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையை கைது செய்ததை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

காங்கயத்தில் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையை கைது செய்ததை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தியதாக தமிழக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையை போலீஸாா் கைது செய்தனா். இதனைக் கண்டித்து காங்கயம் பேருந்து நிலைய ரவுண்டான அருகே காங்கயம் நகர, ஒன்றிய பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கயம் நகரத் தலைவா் சிவப்பிரகாஷ் தலைமை வகித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பாஜக திருப்பூா் தெற்கு மாவட்ட துணைத் தலைவா் கலா நடராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் முத்தூா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். பின்னா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த பாஜகவினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com